நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இடியுடன் கூடிய மழை மற்றும் காட்டுத்தீ என்பன ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளைத் தாக்கியுள்ள பின்னணியில், ஆஸ்திரேலியா மற்றொரு எதிர்பாராத வானிலைக்கான கோடைகாலத்தை எதிர்கொண்டுள்ளது. இதுபற்றி Catriona Stirrat தயாரித்த செய்திவிவரணத்தை செய்தியின் பின்னணிக்காக வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




