தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கார்ல் மார்க்ஸ் மீது முன்வைத்த கடும் விமர்சனங்கள் மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழக ஆளுநருக்கு எதிராக இடதுசாரி அமைப்பின் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மார்க்சியம் பற்றி அவதூறாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆளுநர் மளிகை முன் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மேலும் தமிழக ஆளுநருக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





