பிறருக்கு உதவுவது நல்லது. அதிலும் உதவியை திருப்பித்தர இயலாதவர்களுக்கு உதவுவது மேலானது. அதிலும் வாழ்வின் கடைநிலை மனிதர்களான மனநலம் குன்றி கேட்பாரற்று கைவிடப்பட்டோருக்கு உதவுவது மனித மாண்பின் உச்சகட்டப்பணி. தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் தனது நண்பர்களுடன் இந்த அரும் பணியில் ஈடுபட்டுள்ளனர் செல்வராஜ் மற்றும் அவரின் நண்பர்கள். வசதியான பின்னணியுடன் தொழிலதிபராக இயங்கும் செல்வராஜ் தனது மனித நேயப்பணி அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.






SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




