தமிழ் சமூகத்திலுள்ள சில ஆசிரியர்கள் மாணவர்களை திட்டுதல், மிரட்டுதல், அவமானப்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாகப் பல பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். இவ்வாசிரியர்களின் கடும் போக்கினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவ்வாறான போக்கினை எவ்வாறு தடுக்கலாம் போன்றன குறித்த ஒரு விவரணத்தை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். பாதிக்கப்பட்ட இரு தமிழ்ப் பெற்றோர்கள், மெல்பனிலுள்ள பாடசாலையொன்றில் பணியாற்றும் ஆசிரியை தவினா வேந்தன் மற்றும் சிட்னியில் குழந்தைகள் நல ஆலோசகராகப் பணியாற்றிவரும் Counsellor ஷோபனா சுரேஷ் ஆகியோரின் கருத்துகளுடன் இவ்விவரணம் ஒலிபரப்பாகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




