P வாசு அவர்கள், பல தரமான, மக்கள் மனதைக் கவர்ந்த, தென்னிந்தியத் திரைப்படங்களின் இயக்குனர், கதாசிரியர் மற்றும் நடிகர் ஆவார். சிட்னி வந்திருந்த அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். நீண்ட நேர்காணலின் மூன்றாம் பாகத்தில், MGR அவர்களின் நினைவைப் பகிர்வதுடன், அவர் நடிப்பில் உருவாக்கும் புதிய திரைப்படம் குறித்தும் P வாசு அவர்கள் பேசுகிறார்.