விருது பெற்ற “எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு” (Counting and Cracking) – என்ற நாடகத்தை மேடைக்கு எடுத்து வந்த எஸ். சக்திதரன் மற்றும் ஏமன் ஃப்ளாக் (Eamon Flack) ஆகியோர் மீண்டும் இணைந்து, “காடும் கடலும்” (The Jungle and the Sea) என்ற மேடை நாடகத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் பகிரப்படாத வரலாற்றைப் பல்வேறு கோணங்களில் – இழப்புகளிலிருந்து மீள்வது, உண்மையான அன்பைக் கண்டறிவது மற்றும் நீதிக்கான பாதையை உருவாக்குவது என்று பல பரிமாணங்களில் வெளிக் கொண்டுவரும் “காடும் கடலும்” நாடகம் குறித்து, அதில் பங்கேற்கும் கலைஞர்கள் அர்ஜுனன் புவீந்திரன் மற்றும் காளீஸ்வரி ஸ்ரீநிவாசன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
———-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





