கடந்த அக்டோபர் 14 முதல், கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டியதில்லை. அத்துடன் முதியோர் பராமரிப்பு, ஊனமுற்றோர் பராமரிப்பு, பூர்வீககுடி பின்னணி கொண்டவர்களின் சுகாதாரம் மற்றும் மருத்துவ பராமரிப்புத் துறைகளில் உள்ள பணியாளர்கள் தவிர, ஏனையோருக்கான Pandemic Leave Disaster கொடுப்பனவும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படியாக நாட்டில் என்னென்ன கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்பது தொடர்பில் விளக்குகிறார் யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




