ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியர்களில் பலர் மோசடிக்காரர்களிடம் சிக்கி பெருந்தொகையான பணத்தை இழக்கின்றனர். அண்மையில் Hope Business என்ற App மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசடி ஒன்றில் சிக்கி, பல தமிழர்கள், குறிப்பாக அகதிப்பின்னணி கொண்டவர்கள் பணத்தை இழந்திருக்கிறார்கள். இவர்களில் மூவரான சிட்னியைச் சேர்ந்த மோகன், குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர்( பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஊடகவியலாளர் சந்திப்பு மூலம் தமது அனுபவத்தை விளக்கியிருந்தனர். இந்த ஊடக சந்திப்பில் SBS செய்திப் பிரிவும் கலந்துகொண்டிருந்து. இம்மோசடி தொடர்பிலான விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





